372. வாரும் பெத்லகேம் வாரும்

வாரும் பெத்லெகேம்

1. வாரும், பெத்லகேம் வாரும்,-வாரும்,
வரிசையுடனே வாரும்;
வாரும், எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை,
வாரும், விரைந்து வாரும்.

2. எட்டி நடந்து வாரும்,-அதோ
ஏறிட்டு நீர் பாரும்;
பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது,
பாரும் மகிழ்ந்து பாரும்.

3. ஆதியிலதமேவை-அந்நாள்
அருந்திய பாவவினை;
ஆ! திரித்துவ தே வன் மனிதத்துவ
மாயினர், இது புதுமை!

4. விண்ணுலகாதிபதி,-தீர்க்கர்
விளம்பின சொற்படிக்கு;
மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
மானிடனா யுதித்தார்.

5. சொல்லுதற் கரிதாமே,-ஜோதி
சுந்தர சோபனமே;
புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
பூபதிதான் பிறந்தார்.

6. மந்தை மாடடையில்-மாது
மரியவள் மடியதனில்,
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்.

7. தூதர் பறந்துவந்து-தேவ
துந்துமி மகிழ்பாட,
மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
மங்களமொடு நாட.


ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: ஐ.த. எலியேசர்