வேத புத்தகம் விலைபெற்ற செல்வம்
பல்லவி
வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.
சரணங்கள்
1. பேதைகளின் ஞானமே,-பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே,-பாக்யர் விரும்புந் தேனே! - வேத
2. என்னை எனக்குக் காட்டி-என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப்-போகும் வழி சொல்வாயே. - வேத
3. துன்பகாலம் ஆறுதல்-உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய்-என்றும்நம்பின பேர்க்கே. - வேத
4. பன்னிரு மாதங்களும்-பறித்துண்ணலாம் உன்கனி;
உன்னைத் தியானிப்பவர்-உயர்கதி சேர்ந்திடுவார். - வேத
ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: அருளானந்தம்