357. யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம்

பல்லவி

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்,
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்.

சரணங்கள்

1. வேதாளக் கணங்கள்[1] ஓடிடவே,
ஓடிடவே உருகி வாடிடவே. - யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே,
துதித்திடவே, பரனைத் துதித்திடவே. - யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன,[2]
தெறிபட்டன நொடியில் முறிபட்டன. - யூத

4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே,
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே. - யூத

5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்,
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார். - யூத

6. மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை,
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை. - யூத

7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்,
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம். - யூத


ராகம்: கேதாரம்
தாளம்: ஆதி தாளம்

[1] நரகக் கூட்டங்கள்
[2] உடைந்தன