யூத ராஜ சிங்கம்
பல்லவி
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்,
உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார்.
சரணங்கள்
1. வேதாளக் கணங்கள்[1] ஓடிடவே,
ஓடிடவே உருகி வாடிடவே. - யூத
2. வானத்தின் சேனைகள் துதித்திடவே,
துதித்திடவே, பரனைத் துதித்திடவே. - யூத
3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன,[2]
தெறிபட்டன நொடியில் முறிபட்டன. - யூத
4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே,
எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே. - யூத
5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்,
அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார். - யூத
6. மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை,
மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை. - யூத
7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்,
பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம். - யூத
ராகம்: கேதாரம்
தாளம்: ஆதி தாளம்
[1] நரகக் கூட்டங்கள்
[2] உடைந்தன