306. பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராஜா
                             
பல்லவி

பவனி செல்கின்றார் ராசா-நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!

அனுபல்லவி

அவனிதனிலே மறி[1]மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம். - பவனி

சரணங்கள்

 1. எருசலேமின் பதியே[2] -சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே! - பவனி

2. பன்னிரண்டு சீஷர் சென்று-நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத. - பவனி

3. குருத்தோலைகள் பிடிக்க,-பாலர்
கும்புகும்பாகவே நடக்க,
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற. - பவனி


ராகம்: யமுனா கல்யாணி
தாளம்: ரூபக தாளம்

[1]. கழுதைக் குட்டி
[2]. மணவாளன்