ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
பல்லவி
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே;-அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே.
சரணங்கள்
1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே;-பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்; கண்டுணர் நீ, மனமே. - தேன்
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம்;-பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு; நிதம் துதி, என் மனமே. - தேன்
3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும்;-என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ, மனமே. - தேன்
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேச ரிடம்;-நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்; ஆசைகொள் நீ, மனமே. - தேன்
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம்;-அதைப்
பூண்டுகொண் டால்தான் பொன்னகர் வாழ்வில் புகுவாய் நீ, மனமே. - தேன்
ராகம்: ஹரிகாம்போதி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: அ. சவரிமுத்து
[1] மோட்ச
[2] இனிய
[3] கவி பாடுவார்