ஜீவனே நித்திய ஜீவனே
பல்லவி
ஜீவனே, நித்திய ஜீவனே!
ஜீவனே, பரமானந்த திவ்ய பாலகனாகவந்த
ஜீவனே, நித்திய ஜீவனே!
அனுபல்லவி
காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீரவந்த - ஜீவனே
சரணங்கள்
1. வல்லமைத் திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன்
துல்லிபத்தின்[1] ஞான தீபன், நல்லவர்க்கருள் தயாபன்
அல்லிருள்[2] போதே-அடர்-புல்லதின் மீதே-வரல்
ஆன வான மோன ஞான நேசமே! - ஜீவனே
2. நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன்,
சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்,
சித்திரச் சுதனே,-திரி-தத்வ அற்புதனே,-பர
தேசு லாச நேச மேசியா வேந்தே! - ஜீவனே
3. வானத்தைப் படைத்த கர்த்தர், ஞானத்தை உடைத்த நித்தர்
மேன்மை தேவத்துவ பரிசுத்தர், கானத்துற்றெமைக்கரிசித்தர்,
மட்டளவற்றோர்,-மாட்டுக்-கொட்டிலுற்றோர்-இன்று
வாழ்த்தி, ஏற்றி, போற்றி, ஸ்தோத்திரஞ் சொல்வோம். - ஜீவனே
ராகம்: வனஸ்பதி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1] புகழ்பெற்றவன்
[2] சுத்தத்தின்