391. வேளை இது சபையே நித்திரையை

வேளை இது சபையே

பல்லவி

வேளை இது சபையே-நித்திரையை
விட்டுஎழுந்திருக்க-நல்ல.

அனுபல்லவி

நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட. - வேளை

சரணங்கள்

1. நாம் விசுவாசிகளாய்த்-திரும்பின
நல்வேளை தன்னிலுமே,
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறிந்தோமல்லோ. - வேளை

2. பாவஇருள்விடுத்தோம்,-பகலதுக்
கான வொளியடுத்தோம்;
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விட்டுவெளிச்சப் பேராயுதம் பூண்டிட. - வேளை

3. தானவனாலயமே-உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்காமல்
மேனியைப்பேணும் விருப்பமாகாது. - வேளை

4. கத்தரினாலயத்தைக்-கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே. -வேளை


ராகம்: பைரவி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: சு. முத்துசாமி