வாரும் எமது வறுமை நீக்க
பல்லவி
வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே;
மழை தாரும், ஜீவனே.
சரணங்கள்
1. பாரில்[1] மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே; வெகு
கேடும் நீண்டதே. - வாரும்
2. நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே் மிகக்
கஷ்டம் ஆச்சுதே. - வாரும்
3. பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே; அன்னம்
பாறல்[2] ஆச்சுதே. - வாரும்
4. தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா; நரர்
தயங்கிறோம் மெய்யாய். - வாரும்
5. கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே; எங்கள்
தயங்கல் தீருமே. - வாரும்
ராகம்: மணிரங்கு
தாளம்: ரூபக தாளம்
ஆசிரியர்: ச. யோசேப்பு
[1] பூமியில்
[2] புலம்பல்