பாவி நான் என்ன செய்வேன்?
பல்லவி
பாவி நான் என்ன செய்வேன்,-கோவே,
ஜீவன் நீர் விட்டதற்காய்?
அனுபல்லவி
தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்
தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? - பாவி
சரணங்கள்
1. நாடி எனைத் தயவாய்-மணஞ் செய்ய-தேடி வந்தீர், அரசே
ஆடுகளுக்காக நீடி உயிர் தர,
பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? - பாவி
2. பொன்னுல காதிபனே,-தேவரீர்-என்ன செய்தீர், ஐயனே?
சின்னப் படுத்தவும் கன்னடித்தடிக்கவும்,
சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும். - பாவி
3. வாரால் அடிக்கப்பட்டு,-குட்டுண்டு-வாதைப்ட்டெண்ணம் அற்றீர்;
சீரா[1] மனுடவ தாரா, சருவாதி
காரா, பரம குமாரா, ஓலோலமே! - பாவி
4. வாதை உமக்கெதினால்-உண்டாயிற்று?-பாதகி பாவத்தினால்
வேதம் நிறைவுற, ஆதி பவம் அற,
நீதி தரும் யேசு நாத சுவாமியே. - பாவி
5. குற்றமற்ற மீட்பர்,-பவக்கடன்-முற்றும் அறத்தீர்ப்பர்,
கொற்ற வர்க்கும், கல்வி கற்றவர்க்கும், சுரர்
மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே. - பாவி
ராகம்: நாதநாமக்கிரியை
தாளம்: சாபுதாளம்.
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1] மேன்மையுள்ளோரே