314. பார்க்க முனம் வருவேன்

பார்க்க முனம் வருவேன்

பல்லவி

பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில்
பத்ரமாகத் கரிசித்த மேசியாவை.

அனுபல்லவி

ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன்
அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து, - பார்

சரணங்கள்

1. நிச்சய சாதாரண சத்திய வேதனை,
நின்மல ஞான வரப்பிரசாதனை,
உச்சித வாக்ய சுவிசேட போதனை,
உன்னத ரட்சகர் கிறிஸ்தேசு நாதனை, - பார்

2. முற் பிதாக்கள் விரும்பிய தேட்டம்,
முன்னே ஆதிப் பிதாவின் சிரேட்டம்,
எப்பு விக்கும் எவர்க்கும் கொண்டாட்டம்,
எந்தையின் சுதன் மேல் என்றன் நாட்டம். - பார்

3. ஆசைக் கிறிஸ்துண்மை யான நல் ஆயனை,
ஆத்தும நாயகர் ஆன என் நேயனை,
பாச வலையில் கை தூக்கின நாயனை,
பக்ஷ மொடு காத்த முக்ய சகாயனை. - பார்

4. ஆச்சரிய மான நேசத்தை, பாசத்தை,
அன்பின் திருமுகத்தை, ஐந்து காயத்தை,
காட்சி தரும் இரு பாதத்தைப், பாவியைக்
கைதூக்கி விட்ட கரத்தை, உரித்தாக. - பார்


ராகம்: உசேனி
தாளம்: ரூபக தாளம்
ஆசிரியர்:  வே. சாஸ்திரியார்