246. துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்

பரமண்டல சுவிசேடக நாமம்

பல்லவி

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன க்ஷேமம்!

சரணங்கள்

1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ[1] தீபன்,
கதி உம்பர்கள் தொழும் இங்கித[2] கருணைப் பிர தாபன். - துதி

2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார். - துதி

3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார். - துதி

4. அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன். - துதி

5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன். - துதி

6. விண் ணாடரும் மண் ணாடரும் மேவுந் திருப் பாதன்,
பண்ணோதுவர்[3] கண்ணாம் வளர் பரமண்டல நாதன். - துதி


ராகம்: சூரியகாந்தம்
தாளம்: ரூபக தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்