242. தீய மனதை மாற்ற வாரும்

தீய மனதை மாற்ற வாரும்

பல்லவி

தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே,-கன
நேய ஆவியே.

சரணங்கள்

1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால்,-மிக மாயும்
    பாவி நான். - தீய

2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே,-மருள்
    தீர்க்கும், தஞ்சமே. - தீய

3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான்,[1] ஐயா.-ஒரு
    பாவி நான் ஐயா. - தீய

5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே,-அதைப்
    புகழ்ந்து காக்கவே. - தீய

6. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி, இரந்து கெஞ்சவே,-தினம்
    இதயம் அஞ்சவே. - தீய

7. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே,-அவர்
    கிருபை தேடவே. - தீய

8. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே,-மிகு
    தெளிவு வேண்டவே. - தீய

9. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊற்றி ஜெபித்துப் போற்றவே,-மிகச்
    சிறப்பாய் ஏற்றவே. - தீய


ராகம்: மணிரங்கு
தாளம்: ஏசு தாளம்
ஆசிரியர்: வின்பிரட்

[1] பதர்