234. தாசரே இத்தரணியை அன்பாய்

தாரணியை யேசுவுக்குச் சொந்தமாக்குவோம்

பல்லவி

தாசரே, இத்தரணியை அன்பாய்
யேசுவுக்குச் சொந்தமாக்குவோம்.

அனுபல்லவி

நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
வெளிச்சம் வீசுவோம். - தாச

சரணங்கள்

1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தோரை,
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்,
உரித்தாய் யேசு பாவப் பாரத்தை,
நமது துக்கத்தை, நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே. - தாசரே

2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
பட்சமாக உதவி செய்வோம்;
உசித நன்மைகள் நிறைந்து, தமை மறந்து,
யேசு கனிந்து, திரிந்தனரே. - தாசரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை;
நீசரை நாம் உயர்த்திடுவோம்;
பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்,
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே. - தாசரே

4. இந்தியதேச மாது சிரோமணிகள்
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்;
சுந்தர குணங்களடைந்து, அறிவிலுயர்ந்து,
நிர்பந்தங்கள் தீர்ந்து, சிறந்திலங்கிட. - தாசரே

5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்;
ஊக்கமாக ஜெபித்திடுவோம், நாமுயன்றிடுவோம்,
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம். - தாசரே


ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வே. சந்தியாகு