226. தயை கூர் ஐயா என் ஸ்வாமீ

தயைகூர் ஐயா

பல்லவி

தயை கூர், ஐயா; என் ஸ்வாமீ, பாவி நான்,
தயை கூர், ஐயா; நின்தாசன், ஏசையா;
தயை கூர், ஐயா.

சரணங்கள்

1. ஜெய மனுவேலன், நய அனுகூலன்,
சீரா, தீரா, அதிகாரா, திருக்குமார,
சேயர்கள் பணிவிடை மேவிய நேச வி
லாச க்ருபாசன யேசு நரேந்திரா![1] - தயை

2. வானத்திலிருந்து வந்து, ஞானத் துரு உவந்து,
வளமை[2] கொண்டு, கிருபை விண்டு, குடில் கண்டு,
மாடடை வீடதி னூடு புல் மேடையில்
நீடின போதினி மோடியதாமோ? - தயை

3. தந்தை பிதாவின் மைந்தன் மைந்தர் வடிவமாகி,
தராதலமேவி[3] வா, பாவி' எனக் கூவி,
சாங்கமதாய்[4] அருள் ஓங்கி, மகா பெரு
ஈங்கிசையாய்[5] உயிர் நீங்கினதாலே நீ. - தயை

4. தேவ ரட்சிப்பனைத்தும் பாவிகட்காய் விளைத்தும்,
சிலுவையில் மாண்டும், துயர் பூண்டும், சிறை மீண்டும்
ஜீவனோடதிபதி பராபரனார் வல
பாரிசமே அர சாளும் இந் நேரம் நீ - தயை

ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்

[1] அரசனே
[2] மேன்மை
[3] பூமியிடம் வந்து
[4] முழுவதும்
[5] உபத்திரவமுள்ளதாய்